அலைகள் ALAIGAL





அலைகள் ALAIGAL



ஓடி  ஓடி  நீ  வந்தாய்   எதைத் தேடி 
வந்த  வேகத்திலே   திரும்பினாய்
உள்  கடலைக்   கூடி 

ஆழ் கடலின்   அமைதியும்    கரை கடலின்    கொந்தளிப்பும் !
நுரைக்கின்றாய்    நாள்   முழுதும்    எதை    உணர்த்த? 

வெளி உலகில்   நித வாழ்வில்    களிப்பாய்   நீ   துடிப்பாய் 
ஆனால்
ஆழ் மனதில்    இறை உணர்வில்     அமைதியாய்
எந்நாளும்   ஓ  மனமே    நீ     இருப்பாய்

என்றுணர்த்தும்    தத்துவமோ     சொல்    அலையே 



         --  லல்லி